துக்க நிவாரண அஷ்டகம்
1. மங்கள ரூபிணி மதியணி சூலினி மன்மத பாணியளே,
சங்கடம் நீங்கிட சடுதியில் வந்திடும் சங்கரி சௌந்தரியே,
கங்கன பாணியன் கனிமுகம் கண்ட நல் கற்பக காமினியே,
ஜெய ஜெய சங்கரி கௌரி க்ருபாகரி துக்க நிவாரணி காமாக்ஷி.
2. கானுரு மலரென கதிரொளி காட்டி காத்திட வந்திடுவாள்,
தானுரு தவஒலி தாரொளி மதிஒளி தாங்கியே வீசிடுவாள்,
மானுரு விழியால் மாதவர் மொழியால் மாலைகள் சூடிடுவாள்,
ஜெய ஜெய சங்கரி கௌரி க்ருபாகரி துக்க நிவாரணி காமாக்ஷி.
3.சங்கரி சௌந்தரி சதுர்முகன் போற்றிட சபையினில் வந்தவளே,
பொங்கரி மாவினில் பொன்னடி வைத்து பொரிந்திட வந்தவளே,
என்குலம் தழைத்திட எழில் வடிவுடனே எழுந்தனல் துர்கயளே,
ஜெய ஜெய சங்கரி கௌரி க்ருபாகரி துக்க நிவாரணி காமாக்ஷி.
4.தண தண தண் தண தவிலொலி முழங்கிட தண்மணி நீ வருவாய்,
கண கண கண் கண கதிர் ஒலி வீசிட கண்மணி நீ வருவாய்,
பண பண பம் பண பறை ஒலி கூவிட பண்மணி நீ வருவாய்,
ஜெய ஜெய சங்கரி கௌரி க்ருபாகரி துக்க நிவாரணி காமாக்ஷி.
5.பஞ்சமி பைரவி பர்வத புத்ரி பஞ்சனல் பாணியளே,
கொஞ்சிடும் குமரனை குணமிகு வேலனை கொடுத்தனல் குமரியளே,
சங்கடம் தீர்த்திட சமரது செய்தனால் சக்தி எனும் மாயே,
ஜெய ஜெய சங்கரி கௌரி க்ருபாகரி துக்க நிவாரணி காமாக்ஷி.
6.எண்ணியபடி நீ அருளிட வருவாய் என் குல தேவியளே,
பண்ணிய செயலின் பலனது நலமாய் பல்கிட அருளிடுவாய்,
கண்ணொளி அதனால் கருணையை காட்டி கவலைகள் தீர்பவளே,
ஜெய ஜெய சங்கரி கௌரி க்ருபாகரி துக்க நிவாரணி காமாக்ஷி.
7.இடர் தரும் தொல்லை இனிமேல் இல்லை என்று நீ சொல்லிடுவாய்,
சுடர் தரும் அமுதே சுருதிகள் கூறி சுகமதை தந்திடுவாய்,
படர் தரும் இருளில் பரிதியாய் வந்து பழவினை ஓட்டிடுவாய்,
ஜெய ஜெய சங்கரி கௌரி க்ருபாகரி துக்க நிவாரணி காமாக்ஷி.
8.ஜெய ஜெய பாலா சாமுண்டீஸ்வரி ஜெய ஜெய ஸ்ரீதேவி,
ஜெய ஜெய துர்கா ஸ்ரீபரமேஸ்வரி ஜெய ஜெய ஸ்ரீதேவி,
ஜெய ஜெய ஜெயந்தி மங்கள காளி ஜெய ஜெய ஸ்ரீதேவி,
ஜெய ஜெய சங்கரி கௌரி க்ருபாகரி துக்க நிவாரணி காமாக்ஷி.
Thukka Nivarana Ashtakam
