Prabantham Thirumalai

நிரல் முகப்பு / பிரபந்தம் / திருமாலை

0-10-20–30-40
பிரபந்த தனியன்கள்
திருவங்கப்பெருமாளரையர் அருளிச்செய்தது

மற்றொன்றும் வேண்டா மனமே. மதிளரங்கர்,
கற்றினம் மேய்த்த கழலிணைக்கீழ்,- உற்ற
திருமாலை பாடும்சீர்த் தொண்டரடிப்பொடியெம்
பெருமானை, எப்பொழுதும் பேசு.
திருவங்கப்பெருமாளரையர் அருளிச்செய்தது

மற்றொன்றும் வேண்டா மனமே. மதிளரங்கர்,
கற்றினம் மேய்த்த கழலிணைக்கீழ்,- உற்ற
திருமாலை பாடும்சீர்த் தொண்டரடிப்பொடியெம்
பெருமானை, எப்பொழுதும் பேசு.
பாசுரங்கள்

1

காவலில் புலனை வைத்துக்* கலிதன்னைக் கடக்கப் பாய்ந்து,*
நாவலிட்டு உழி தருகின்றோம்* நமன் தமர் தலைகள் மீதே,*

மூவுலகு உண்டு உமிழ்ந்த​* முதல்வ நின் நாமம் கற்ற,*
ஆவலிப் புடைமை கண்டாய்* அரங்கமா நகர் உளானே. (2)

2

பச்சை மாமலைபோல் மேனி* பவளவாய் கமலச் செங்கண்*
அச்சுதா! அமரர் ஏறே!* ஆயர் தம் கொழுந்தே! என்னும்,*

இச்சுவை தவிர யான்போய்* இந்திர லோகம் ஆளும்,*
அச்சுவை பெறினும் வேண்டேன்* அரங்கமா நகர் உளானே! (2)

3

வேத நூல் பிராயம் நூறு* மனிசர் தாம் புகுவ ரேலும்,*
பாதியும் உறங்கிப் போகும்* நின்றதில் பதினையாண்டு,*

பேதை பாலகனதாகும்* பிணி பசி மூப்புத் துன்பம், *
ஆதலால் பிறவி வேண்டேன் * அரங்கமா நகர் உளானே.*

4

மொய்த்த வல்வினையுள் நின்று* மூன்று எழுத்துடைய பேரால்,*
கத்திர பந்தும் அன்றே* பராங்கதி கண்டு கொண்டான்,*

இத்தனை அடியரானார்க்கு* இரங்கும் நம் அரங்கனாய*
பித்தனைப் பெற்றும் அந்தோ!* பிறவியுள் பிணங்கு மாறே!

5

பெண்டிரால் சுகங்கள் உய்ப்பான்* பெரியதோர் இடும்பை பூண்டு*
உண்டிராக் கிடக்கும் போது* உடலுக்கே கரைந்து நைந்து,*

தண்டுழாய் மாலை மார்பன்* தமர்களாய்ப் பாடி யாடி,*
தொண்டு பூண்டமுதம் உண்ணாத்* தொழும்பர் சோறு உகக்குமாறே!

6

மறம்சுவர் மதிளெடுத்து* மறுமைக்கே வெறுமை பூண்டு,*
புறம்சுவர் ஓட்டை மாடம்* புரளும்போது அறிய மாட்டீர்,*

அறம் சுவராகி நின்ற* அரங்கனார்க்கு ஆட்செய்யாதே,*
புறம்சுவர் கோலம் செய்து* புள் கவ்வக் கிடக்கின்றீரே!

7

புலையறம் ஆகிநின்ற* புத்தொடு சமண மெல்லாம்,*
கலையறக் கற்ற மாந்தர்* காண்பரோ கேட்பரோதாம்,*

தலை அறுப்புண்டும் சாவேன்* சத்தியம் காண்மின் ஐயா,*
சிலையினால் இலங்கை செற்ற* தேவனே தேவன் ஆவான்.

8

வெறுப்பொடு சமணர் முண்டர்* விதியில் சாக்கியர்கள்,* நின்பால்-
பொறுப்பரியனகள் பேசில்* போவதே நோயதாகி*

குறிப்பெனக் கடையும் ஆகில்* கூடுமேல் தலையை* ஆங்கே,-
அறுப்பதே கருமம் கண்டாய்* அரங்கமா நகருளானே!

9

மற்றுமோர் தெய்வம் உண்டே* மதியிலா மானி டங்காள்,*
உற்றபோது அன்றி நீங்கள்* ஒருவன் என்று உணர மாட்டீர் ,*

அற்றம்மேல் ஒன்று அறியீர் * அவனல்லால் தெய்வ மில்லை,*
கற்றினம் மேய்த்த எந்தை* கழலிணை பணிமின் நீரே.

10

நாட்டினான் தெய்வம் எங்கும்* நல்லதோர் அருள் தன்னாலே.*
காட்டினான் திருவரங்கம்* உய்பவர்க்கு உய்யும் வண்ணம்,*

கேட்டிரே நம்பிமீர்காள்!* கெருட வாகனனும் நிற்க,*
சேட்டை தன் மடியகத்துச்* செல்வம் பார்த்து இருக்கின்றீரே.

11

ஒருவில்லால் ஓங்கு முந்நீர்* அடைத்து உலகங்கள் உய்ய,*
செருவிலே அரக்கர் கோனைச்* செற்ற நம் சேவகனார்,*

மருவிய பெரிய கோயில்* மதில் திருவரங்கம் என்னா,*
கருவிலே திருவிலாதீர்!* காலத்தைக் கழிக்கின்றீரே.

12

நமனும் முற்கலனும் பேச* நரகில் நின்றார்கள் கேட்க,*
நரகமே சுவர்க்கம் ஆகும்* நாமங்கள் உடையன் நம்பி,*

அவனது ஊர் அரங்கம் என்னாது* அயர்த்து வீழ்ந்து அளிய மாந்தர்,*
கவலையுள் படுகின்றார் என்று* அதனுக்கே கவல்கின்றேனே!

13

எறியுநீர் வெறிகொள் வேலை* மாநிலத்து உயிர்கள்எல்லாம்,*
வெறிகொள் பூந்துளவ மாலை* விண்ணவர் கோனை ஏத்த,*

அறிவிலா மனிசர் எல்லாம்* அரங்கமென்று அழைப்பராகில்,*
பொறியில்வாழ் நரகம் எல்லாம்* புல்லெழுந்து ஒழியுமன்றே?

14

வண்டினம் முரலும் சோலை* மயிலினம் ஆலும் சோலை,*
கொண்டல் மீதுஅணவும் சோலை* குயிலினம் கூவும் சோலை,*

அண்டர்கோன் அமரும் சோலை* அணி திருவரங்கம் என்னா,*
மிண்டர் பாய்ந்து உண்ணும் சோற்றை விலக்கி* நாய்க்கு இடுமின்நீரே.

15

மெய்யர்க்கே மெய்யனாகும்* விதியிலா என்னைப் போல,*
பொய்யர்க்கே பொய்யனாகும்* புட்கொடி உடைய கோமான்,*

உய்யப்போம் உணர்வினார்கட்கு* ஒருவன் என்றுணர்ந்த பின்னை,*
ஐயப்பாடு அறுத்துத் தோன்றும்* அழகன்ஊர் அரங்கம் அன்றே?

16

சூதனாய்க் கள்வனாகித்* தூர்த்தரோடு இசைந்த காலம்,*
மாதரார் கயற்கண் என்னும்* வலையுள் பட்டு அழுந்துவேனை,*

போதரே என்று சொல்லி* புந்தியுள் புகுந்து தன்பால்-
ஆதரம் பெருக வைத்த* அழகனூர் அரங்கம் அன்றே?

17

விரும்பி நின்று ஏத்த மாட்டேன்* விதியிலேன் மதியொன்றில்லை,*
இரும்புபோல் வலிய நெஞ்சம்* இறை-இறை உருகும் வண்ணம்,*

சுரும்புஅமர் சோலை சூழ்ந்த* அரங்கமா கோயில் கொண்ட,*
கரும்பினைக் கண்டு கொண்டு* என் கண்ணினை களிக்கு மாறே!

18

இனிதிரைத் திவலை மோத* எறியும்தண் பரவை மீதே,*
தனிகிடந்து அரசு செய்யும்* தாமரைக் கண்ணன் எம்மான்,*

கனியிருந்து அனைய செவ்வாய்க்* கண்ணனைக் கண்ட கண்கள்,*
பனிஅரும்பு உதிருமாலோ* என்செய்கேன் பாவியேனே!

19

குடதிசை முடியை வைத்துக்* குணதிசை பாதம் நீட்டி,*
வடதிசை பின்பு காட்டித்* தென்திசை இலங்கை நோக்கி,*

கடல்நிறக் கடவுள் எந்தை* அரவணைத் துயிலுமா கண்டு,*
உடல்எனக்கு உருகுமாலோ* என்செய்கேன் உலகத்தீரே! (2)

20

பாயும் நீர் அரங்கந்தன்னுள்* பாம்பணைப் பள்ளி கொண்ட,*
மாயனார் திருநன் மார்வும்* மரகத உருவும் தோளும்,*

தூய தாமரைக் கண்களும்* துவரிதழ் பவள வாயும்,*
ஆயசீர் முடியும் தேசும்* அடியரோர்க்கு அகலல்ஆமே?

21

பணிவினால் மனமதுஒன்றிப்* பவளவாய் அரங்கனார்க்குத்,*
துணிவினால் வாழமாட்டாத்* தொல்லை நெஞ்சே! நீ சொல்லாய்,*

அணியினார் செம்பொன்னாய* அருவரை அனைய கோயில்,*
மணியனார் கிடந்தவாற்றை* மனத்தினால் நினைக்கலாமே?

22

பேசிற்றே பேசல் அல்லால்* பெருமை ஒன்று உணரலாகாது,*
ஆசற்றார் தங்கட்குஅல்லால்* அறியலா வானும்மல்லன்,*

மாசற்றார் மனத்துளானை* வணங்கி நாம் இருப்பதல்லால்,*
பேசத்தான் ஆவதுண்டோ?* பேதை நெஞ்சே!நீ சொல்லாய்.

23

கங்கயிற் புனித மாய* காவிரி நடுவு பாட்டு,*
பொங்குநீர் பரந்து பாயும்* பூம்பொழி லரங்கந் தன்னுள்,*

எங்கள்மா லிறைவ னீசன்* கிடந்ததோர் கிடக்கை கண்டும்,*
எங்ஙனம் மறந்து வாழ்கேன்* ஏழையே னேழை யேனே!

24

வெள்ளநீர் பரந்து பாயும்* விரிபொழி லரங்கந் தன்னுள்,*
கள்ளனார் கிடந்த வாறும்* கமலநன் முகமும் கண்டு*

உள்ளமே! வலியைப் போலும்* ஒருவனென் றுணர மாட்டாய்,*
கள்ளமே காதல் செய்துன்* கள்ளத்தே கழிக்கின் றாயே!

25

குளித்துமூன் றனலை யோம்பும்* குறிகொளந் தணமை தன்னை,*
ஒளித்திட்டே னென்க ணில்லை* நின்கணும் பத்த னல்லேன்,*

களிப்பதென் கொண்டு நம்பீ!* கடல்வண்ணா! கதறு கின்றேன்,*
அளித்தெனக் கருள்செய் கண்டாய்* அரங்கமா நகரு ளானே!

26

போதெல்லாம் போது கொண்டுன்* பொன்னடி புனைய மாட்டேன்,*
தீதிலா மொழிகள் கொண்டுன்* திருக்குணம் செப்ப மாட்டேன்,*

காதலால் நெஞ்ச மன்பு* கலந்திலே னதுதன் னாலே,*
ஏதிலே னரங்கர்க்கு எல்லே!* எஞ்செய்வான் தோன்றி னேனே!

27

குரங்குகள் மலையை தூக்கக்* குளித்துத்தாம் புரண்டிட் டோடி,*
தரங்கநீ ரடைக்க லுற்ற* சலமிலா அணிலம் போலேன்,*

மரங்கள்போல் வலிய நெஞ்சம்* வஞ்சனேன் நெஞ்சு தன்னால்,*
அரங்கனார்க் காட்செய் யாதே அளியத்தே* னயர்க்கின் றேனே!

28

உம்பரா லறிய லாகா* ஒளியுளார் ஆனைக் காகி,*
செம்புலா லுண்டு வாழும்* முதலைமேல் சீறி வந்தார்,*

நம்பர மாய துண்டே?* நாய்களோம் சிறுமை யோரா,*
எம்பிராற் காட்செய் யாதே* எஞ்செய்வான் தோன்றி னேனே!

29

ஊரிலேன் காணி யில்லை * உறவுமற் றொருவ ரில்லை,*
பாரில்நின் பாத மூலம்* பற்றிலேன் பரம மூர்த்தி,*

காரொளி வண்ண னே!(என்)* கண்ணனே! கதறு கின்றேன்,*
ஆருளர்க் களைக ணம்மா!* அரங்கமா நகரு ளானே!

30

மனத்திலோர் தூய்மை யில்லை* வாயிலோ ரிஞ்சொ லில்லை,*
சினத்தினால் செற்றம் நோக்கித்* தீவிளி விளிவன் வாளா,*

புனத்துழாய் மாலை யானே!* பொன்னிசூழ் திருவ ரங்கா,*
எனக்கினிக் கதியென் சொல்லாய்* என்னையா ளுடைய கோவே!

31

தவத்துளார் தம்மி லல்லேன்* தனம்படத் தாரி லல்லேன்,*
உவர்த்தநீர் போல* வென்றன் உற்றவர்க் கொன்று மல்லேன்,*

துவர்த்தசெவ் வாயி னார்க்கே* துவக்கறத் துரிச னானேன்,*
அவத்தமே பிறவி தந்தாய்* அரங்கமா நகரு ளானே!

32

ஆர்த்துவண் டலம்பும் சோலை* அணிதிரு வரங்கந் தன்னுள்,*
கார்த்திர ளனைய மேனிக்* கண்ணனே! உன்னைக் காணும்,*

மார்க்கமொன் றறிய மாட்டா* மனிசரில் துரிச னாய,*
மூர்க்கனேன் வந்து நின்றேன்,* மூர்க்கனேன் மூர்க்க னேனே.

33

மெய்யெலாம் போக விட்டு* விரிகுழ லாரில் பட்டு,*
பொய்யெலாம் பொதிந்து கொண்ட* போட்கனேன் வந்து நின்றேன்,*

ஐயனே!அரங்க னே!உன் அருளென்னு மாசை தன்னால்,*
பொய்யனேன் வந்து நின்றேன்* பொய்யனேன் பொய்ய னேனே.

34

உள்ளத்தே யுறையும் மாலை* உள்ளுவா னுணர்வொன் றில்லா,*
கள்ளத்தேன் நானும் தொண்டாய்த்* தொண்டுக்கே கோலம் பூண்டேன்*<

உள்ளுவா ருள்ளிற் றெல்லாம்* உடனிருந் தறிதி யென்று,*
வெள்கிப்போ யென்னுள் ளேநான்* விலவறச் சிரித்திட் டேனே!

35

தாவியன் றுலக மெல்லாம்* தலைவிளாக் கொண்ட எந்தாய்,*
சேவியே னுன்னை யல்லால்* சிக்கெனச் செங்கண் மாலே,*

ஆவியே! அமுதே!* என்றன் ஆருயி ரனைய எந்தாய்,*
பாவியே னுன்னை யல்லால்* பாவியேன் பாவி யேனே.

36

மழைக்கன்று வரைமு னேந்தும்* மைந்தனே மதுர வாறே,*
உழைக்கன்றே போல நோக்கம்* உடையவர் வலையுள் பட்டு,*

உழைக்கின்றேற் கென்னை நோக்கா* தொழிவதே,உன்னை யன்றே*
அழைக்கின்றேன் ஆதி மூர்த்தி!* அரங்கமா நகரு ளானே!

37

தெளிவிலாக் கலங்கல் நீர்சூழ்* திருவரங்கங் கத்துள் ளோங்கும்,*
ஒளியுளார் தாமே யன்றே* தந்தையும் தாயு மாவார்,*

எளியதோ ரருளு மன்றே* எந்திறத் தெம்பி ரானார்,*
அளியன்நம் பையல் என்னார்* அம்மவோ கொடிய வாறே!

38

மேம்பொருள் போக விட்டு* மெய்ம்மையை மிகவு ணர்ந்து,*
ஆம்பரி சறிந்து கொண்டு* ஐம்புல னகத்த டக்கி,*

காம்பறத் தலைசி ரைத்துன்* கடைத்தலை யிருந்துவாழும்*
சோம்பரை உகத்தி போலும்* சூழ்புனல் அரங்கத் தானே!

39

அடிமையில் குடிமை யில்லா* அயல்சதுப் பேதி மாரில்,*
குடிமையில் கடைமை பட்ட* குக்கரில் பிறப்ப ரேலும்,*

முடியினில் துளபம் வைத்தாய்!* மொய்கழற் கன்பு செய்யும்,*
அடியரை யுகத்தி போலும்* அரங்கமா நகரு ளானே!

40

திருமறு மார்வ! நின்னைச்* சிந்தையுள் திகழ வைத்து,*
மருவிய மனத்த ராகில்* மாநிலத் துயிர்க ளெல்லாம்,*

வெருவரக் கொன்று சுட்டிட்* டீட்டிய வினைய ரேலும்,*
அருவினைப் பயன துய்யார்* அரங்கமா நகரு ளானே!

41

வானுளா ரறிய லாகா* வானவா! என்ப ராகில்,*
தேனுலாந் துளப மாலைச்* சென்னியாய்! என்ப ராகில்,*

ஊனமா யினகள் செய்யும்* ஊனகா ரகர்க ளேலும்,*
போனகம் செய்த சேடம்* தருவரேல் புனித மன்றே?

42

பழுதிலா வொழுக லாற்றுப்* பலசதுப் பேதி மார்கள்,*
இழிகுலத் தவர்க ளேலும்* எம்மடி யார்க ளாகில்,*

தொழுமினீர் கொடுமின் கொள்மின்!* என்றுநின் னோடு மொக்க,*
வழிபட வருளி னாய்போன்ம்* மதிள்திரு வரங்கத் தானே!

43

அமரவோ ரங்க மாறும்* வேதமோர் நான்கு மோதி,*
தமர்களில் தலைவ ராய* சாதியந் தணர்க ளேலும்,*

நுமர்களைப் பழிப்ப ராகில்* நொடிப்பதோ ரளவில்,* ஆங்கே-
அவர்கள்தாம் புலையர் போலும்* அரங்கமா நகரு ளானே!

44

பெண்ணுலாம் சடையி னானும்* பிரமனு முன்னைக் காண்பான்,*
எண்ணிலா வூழி யூழி* தவஞ்செய்தார் வெள்கி நிற்ப,*

விண்ணுளார் வியப்ப வந்து* ஆனைக்கன் றருளை யீந்த-
கண்ணறா,* உன்னை யென்னோ* களைகணாக் கருது மாறே!(2)

45

வளவெழும் தவள மாட* மதுரைமா நகரந் தன்னுள்,*
கவளமால் யானை கொன்ற* கண்ணனை அரங்க மாலை,*

துவளத்தொண் டாய தொல்சீர்த்* தொண்டர டிப்பொ டிசொல்,*
இளையபுன் கவிதை யேலும்* எம்பிறார் கினிய வாறே!(2)