Murugan Gayathri Mantras

முருகன் காயத்திரி மந்திரங்கள்!

ஸ்ரீ முருகன் காயத்ரீ
(உறவுகளிடையே ஒற்றுமை ஓங்க)

”ஒம் பார்வதி புத்ராய வித்மஹே
மஹா ஸேனாய தீமஹி
தன்னோ ஷண்முகப் ப்ரசோதயாத்”

(பார்வதி பாலா, சீலா, தேவர் சேனைத் தலைவா,
வேலால் காப்பாய் ஷண்முகா சரணம்)

ஸ்ரீ குகன் காயத்ரீ
(நண்பர்களிடையே ஒற்றுமை ஓங்க)

”ஒம் ஷன்முகாய வித்மஹே
ஷடாட்சராய தீமஹி
தன்னோ குஹப் ப்ரசோதயாத்”

(ஆறு உரு ஆனவனே, ஆறெழுத்தினால் அருள்வாய்,
எனக்கு ஆதரவாய் அருள்செய்வாய் குகனே! ஆறுமுகா சரணம்.)

ஸ்ரீ சிங்காரவேலன் காயத்ரீ
(குழப்பங்கள் தீர)

”ஒம் சிகி வாகனாய வித்மஹே
சிங்கார வேலாய தீமஹி
தன்னோ ஸ்கந்த ப்ரசோதயாத்”

(மால் போற்றும் மயில் வாகனா, வேல் வாங்கி
வெற்றி சூடிய வேலவா சேவல் சரணம்,
செவ்வேள் சரணம், செயல் யாவும் சீராக அருள்வாய் சிங்கார வேலனே)

ஸ்ரீ சரவணன் காயத்ரீ
(சங்கடங்கள் நீங்க)

”ஒம் சரவணபவாய வித்மஹே
சங்கரீ புத்ராய தீமஹி
தன்னோ ஸ்கந்த ப்ரசோதயாத்”

(சரவணத்தில் உதித்தவனே, தேவி சங்கரியின் புதல்வனே,
சங்கடங்கள் தீர்ப்பாய் சரவணபவனே சரணம்.)

ஸ்ரீ ஸ்கந்த காயத்ரீ
(சகோதர உறவுகளிடையே ஒற்றுமை ஓங்க)

”ஒம் சுரபதி மருகாய வித்மஹே
வள்ளி நாதாய தீமஹி
தன்னோ ஸ்கந்த ப்ரசோதயாத்”

(தேவர்கோனின் மருமகனே, மான்மகள் வள்ளி மணவாளா,
மாறாத அருள்புரிவாய் மயில்வாகனா ஸ்கந்தனே சரணம்.)

”ஒம் குக்குட த்வஜாயே வித்மஹே
சக்தி ஹஸ்தாய தீமஹி
தன்னோ ஸ்கந்த ப்ரசோதயாத்”

(கோழிக் கொடி கொண்டவனே, உமையின்
பாலனே, உழியிலும் காப்பாய் ஸ்கந்தனே சரணம்.)

ஸ்ரீ கார்திகேயன் காயத்ரீ
(குடும்ப உறவுகளிடையே ஒற்றுமை ஓங்க)

”ஒம் கார்திகேயாய வித்மஹே
தெய்வானை நாதாயா தீமஹி
தன்னோ ஸ்கந்த ப்ரசோதயாத்”

(கார்திகேயனே, தெய்வானையின் மணாளனே,
எப்போதும் காப்பாய் ஸ்கந்தனே சரணம்.)

ஸ்ரீ குமரன் காயத்ரீ
(எதிரிகளின் பயம் நீங்க)

”ஒம் உமா சுதாய வித்மஹே
குக்குட த்வஜாய தீமஹி
தன்னோ குமர ப்ரசோதயாத்”

(சேவற்கொடியுடைய செவ்வேளே, மலைமகள் குமரா, மால்மருகா,
அழைக்கழிக்கும் பாதகம் அழித்தருள்வாய் சரணம்.)

ஸ்ரீ ஷண்முகன் காயத்ரீ
(புகழ் பெற)

”ஒம் ஷ்டாட்சராய வித்மஹே
சக்தி ஹஸ்தய தீமஹி
தன்னோ ஷண்முக ப்ரசோதயாத்”

(ஆறெழுத்து மந்திரம் கொண்டவனே, கூர்வேல் கொண்டு
தாக்கும் குமரா, பார் போற்ற வாழ வைப்பாய் உன் பாதமலர்ச் சரணம்.)

ஸ்ரீ வேல் காயத்ரீ
(அச்சங்கள் அகல)

”ஒம் ஜ்வால ஜ்வாலாய வித்மஹே
கோடி சூர்ய பிர்காசாய தீமஹி
தன்னோ சக்தி ப்ரசோதயாத்”

(நெருப்பின் நெருப்பான கோடி சூர்ய ஒளியுடன் பிரகாசிக்கும் வேலே.
கந்தனின் கையிலிருந்து எல்லா வேளையும் காத்திடுவாய் கதிர்வேலே சரணம்.)